அறத்துப்பால் (Aram)Chapter 21: தீவினையச்சம்
திருக்குறள் 204
Thirukkural Verse 204 — Dread of Evil Deeds
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
English Meaning
Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.
சாலமன் பாப்பையா
மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.
கலைஞர்
மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்