அறத்துப்பால் (Aram)Chapter 21: தீவினையச்சம்

    திருக்குறள் 206

    Thirukkural Verse 206 — Dread of Evil Deeds

    Thiruvalluvar

    தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்.


    English Meaning

    Let him not do evil to others who desires not that sorrows should pursue him.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.

    சாலமன் பாப்பையா

    துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.

    கலைஞர்

    வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்