அறத்துப்பால் (Aram)Chapter 21: தீவினையச்சம்

    திருக்குறள் 207

    Thirukkural Verse 207 — Dread of Evil Deeds

    Thiruvalluvar

    எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும்.


    English Meaning

    However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.

    சாலமன் பாப்பையா

    எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.

    கலைஞர்

    ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்