அறத்துப்பால் (Aram)Chapter 21: தீவினையச்சம்
திருக்குறள் 208
Thirukkural Verse 208 — Dread of Evil Deeds
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று.
English Meaning
Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.
சாலமன் பாப்பையா
பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.
கலைஞர்
ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்