அறத்துப்பால் (Aram)Chapter 22: ஒப்புரவறிதல்

    திருக்குறள் 220

    Thirukkural Verse 220 — Duty to Society

    Thiruvalluvar

    ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து.


    English Meaning

    If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one’s self.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.

    சாலமன் பாப்பையா

    இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.

    கலைஞர்

    பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்