அறத்துப்பால் (Aram)Chapter 23: ஈகை

    திருக்குறள் 221

    Thirukkural Verse 221 — Giving

    Thiruvalluvar

    வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து.


    English Meaning

    To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.

    சாலமன் பாப்பையா

    ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே.

    கலைஞர்

    இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும் மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்