அறத்துப்பால் (Aram)Chapter 23: ஈகை

    திருக்குறள் 224

    Thirukkural Verse 224 — Giving

    Thiruvalluvar

    இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு.


    English Meaning

    To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.

    சாலமன் பாப்பையா

    கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.

    கலைஞர்

    ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்