அறத்துப்பால் (Aram)Chapter 23: ஈகை

    திருக்குறள் 225

    Thirukkural Verse 225 — Giving

    Thiruvalluvar

    ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்.


    English Meaning

    The power of those who perform penance is the power of enduring hunger. It is inferior to the power of those who remove the hunger (of others).

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.

    சாலமன் பாப்பையா

    வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.

    கலைஞர்

    பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்