அறத்துப்பால் (Aram)Chapter 23: ஈகை
திருக்குறள் 229
Thirukkural Verse 229 — Giving
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல்.
English Meaning
Solitary and unshared eating for the sake of filling up one’s own riches is certainly much more unpleasant than begging.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.
சாலமன் பாப்பையா
பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.
கலைஞர்
பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது