அறத்துப்பால் (Aram)Chapter 23: ஈகை
திருக்குறள் 230
Thirukkural Verse 230 — Giving
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை.
English Meaning
Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
சாலமன் பாப்பையா
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
கலைஞர்
சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது