அறத்துப்பால் (Aram)Chapter 24: புகழ்

    திருக்குறள் 231

    Thirukkural Verse 231 — Renown

    Thiruvalluvar

    ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.


    English Meaning

    Give to the poor and live with praise. There is no greater profit to man than that.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

    சாலமன் பாப்பையா

    ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.

    கலைஞர்

    கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை