அறத்துப்பால் (Aram)Chapter 24: புகழ்
திருக்குறள் 232
Thirukkural Verse 232 — Renown
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்.
English Meaning
Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.
சாலமன் பாப்பையா
சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.
கலைஞர்
போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்