அறத்துப்பால் (Aram)Chapter 24: புகழ்

    திருக்குறள் 233

    Thirukkural Verse 233 — Renown

    Thiruvalluvar

    ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.


    English Meaning

    There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

    சாலமன் பாப்பையா

    தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.

    கலைஞர்

    ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை