அறத்துப்பால் (Aram)Chapter 24: புகழ்
திருக்குறள் 238
Thirukkural Verse 238 — Renown
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்.
English Meaning
Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.
சாலமன் பாப்பையா
புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.
கலைஞர்
தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்