அறத்துப்பால் (Aram)Chapter 24: புகழ்

    திருக்குறள் 239

    Thirukkural Verse 239 — Renown

    Thiruvalluvar

    வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்.


    English Meaning

    The ground which supports a body without fame will diminish in its rich produce.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.

    சாலமன் பாப்பையா

    புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.

    கலைஞர்

    புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்