அறத்துப்பால் (Aram)Chapter 24: புகழ்

    திருக்குறள் 240

    Thirukkural Verse 240 — Renown

    Thiruvalluvar

    வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்.


    English Meaning

    Those live who live without disgrace. Those who live without fame live not.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.

    சாலமன் பாப்பையா

    தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.

    கலைஞர்

    பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்