அறத்துப்பால் (Aram)Chapter 26: புலால் மறுத்தல்

    திருக்குறள் 256

    Thirukkural Verse 256 — Against Eating Flesh

    Thiruvalluvar

    தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.


    English Meaning

    If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.

    சாலமன் பாப்பையா

    தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.

    கலைஞர்

    புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்