அறத்துப்பால் (Aram)Chapter 26: புலால் மறுத்தல்
திருக்குறள் 257
Thirukkural Verse 257 — Against Eating Flesh
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின்.
English Meaning
If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.
சாலமன் பாப்பையா
இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.
கலைஞர்
புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்