அறத்துப்பால் (Aram)Chapter 26: புலால் மறுத்தல்

    திருக்குறள் 258

    Thirukkural Verse 258 — Against Eating Flesh

    Thiruvalluvar

    செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்.


    English Meaning

    The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

    சாலமன் பாப்பையா

    பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.

    கலைஞர்

    மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்