அறத்துப்பால் (Aram)Chapter 29: கள்ளாமை
திருக்குறள் 282
Thirukkural Verse 282 — The Absence of Fraud
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்.
English Meaning
Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா
அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.
கலைஞர்
பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்