அறத்துப்பால் (Aram)Chapter 29: கள்ளாமை

    திருக்குறள் 283

    Thirukkural Verse 283 — The Absence of Fraud

    Thiruvalluvar

    களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்.


    English Meaning

    The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.

    சாலமன் பாப்பையா

    திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.

    கலைஞர்

    கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்