அறத்துப்பால் (Aram)Chapter 29: கள்ளாமை

    திருக்குறள் 284

    Thirukkural Verse 284 — The Absence of Fraud

    Thiruvalluvar

    களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும்.


    English Meaning

    The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

    சாலமன் பாப்பையா

    அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

    கலைஞர்

    களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்