அறத்துப்பால் (Aram)Chapter 29: கள்ளாமை

    திருக்குறள் 285

    Thirukkural Verse 285 — The Absence of Fraud

    Thiruvalluvar

    அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.


    English Meaning

    The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another’s forgetfulness, though desire of his property.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.

    சாலமன் பாப்பையா

    அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது.

    கலைஞர்

    மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது