அறத்துப்பால் (Aram)Chapter 29: கள்ளாமை
திருக்குறள் 286
Thirukkural Verse 286 — The Absence of Fraud
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர்.
English Meaning
They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.
சாலமன் பாப்பையா
உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.
கலைஞர்
ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்