அறத்துப்பால் (Aram)Chapter 29: கள்ளாமை

    திருக்குறள் 287

    Thirukkural Verse 287 — The Absence of Fraud

    Thiruvalluvar

    களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.


    English Meaning

    That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.

    சாலமன் பாப்பையா

    உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.

    கலைஞர்

    அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது