அறத்துப்பால் (Aram)Chapter 29: கள்ளாமை
திருக்குறள் 289
Thirukkural Verse 289 — The Absence of Fraud
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர்.
English Meaning
Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission oftransgression.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.
சாலமன் பாப்பையா
அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.
கலைஞர்
அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்