அறத்துப்பால் (Aram)Chapter 29: கள்ளாமை

    திருக்குறள் 290

    Thirukkural Verse 290 — The Absence of Fraud

    Thiruvalluvar

    கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் தள்ளாது புத்தே ளுளகு.


    English Meaning

    Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.

    சாலமன் பாப்பையா

    திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.

    கலைஞர்

    களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது