அறத்துப்பால் (Aram)Chapter 30: வாய்மை

    திருக்குறள் 291

    Thirukkural Verse 291 — Veracity

    Thiruvalluvar

    வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.


    English Meaning

    Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

    சாலமன் பாப்பையா

    உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.

    கலைஞர்

    பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்