அறத்துப்பால் (Aram)Chapter 30: வாய்மை

    திருக்குறள் 292

    Thirukkural Verse 292 — Veracity

    Thiruvalluvar

    பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.


    English Meaning

    Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.

    சாலமன் பாப்பையா

    குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.

    கலைஞர்

    குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்