அறத்துப்பால் (Aram)Chapter 3: நீத்தார் பெருமை
திருக்குறள் 29
Thirukkural Verse 29 — The Greatness of Ascetics
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது.
English Meaning
The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
சாலமன் பாப்பையா
நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.
கலைஞர்
குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது