அறத்துப்பால் (Aram)Chapter 3: நீத்தார் பெருமை
திருக்குறள் 30
Thirukkural Verse 30 — The Greatness of Ascetics
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்.
English Meaning
The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
சாலமன் பாப்பையா
எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.
கலைஞர்
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்