அறத்துப்பால் (Aram)Chapter 30: வாய்மை

    திருக்குறள் 298

    Thirukkural Verse 298 — Veracity

    Thiruvalluvar

    புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்.


    English Meaning

    Purity of body is produced by water and purity of mind by truthfulness.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

    சாலமன் பாப்பையா

    உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.

    கலைஞர்

    நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்