அறத்துப்பால் (Aram)Chapter 30: வாய்மை

    திருக்குறள் 299

    Thirukkural Verse 299 — Veracity

    Thiruvalluvar

    எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.


    English Meaning

    All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    (புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

    சாலமன் பாப்பையா

    உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.

    கலைஞர்

    புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்