அறத்துப்பால் (Aram)Chapter 30: வாய்மை

    திருக்குறள் 300

    Thirukkural Verse 300 — Veracity

    Thiruvalluvar

    யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற.


    English Meaning

    Amidst all that we have seen (described) as real(excellence), there is nothing sogood as truthfulness.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.

    சாலமன் பாப்பையா

    சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை.

    கலைஞர்

    வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்