அறத்துப்பால் (Aram)Chapter 31: வெகுளாமை

    திருக்குறள் 301

    Thirukkural Verse 301 — The Possession of Benevolence

    Thiruvalluvar

    செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என்?


    English Meaning

    He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?

    சாலமன் பாப்பையா

    எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?

    கலைஞர்

    தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?