அறத்துப்பால் (Aram)Chapter 31: வெகுளாமை

    திருக்குறள் 302

    Thirukkural Verse 302 — The Possession of Benevolence

    Thiruvalluvar

    செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற.


    English Meaning

    Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.

    சாலமன் பாப்பையா

    பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.

    கலைஞர்

    வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும் மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை