அறத்துப்பால் (Aram)Chapter 31: வெகுளாமை
திருக்குறள் 303
Thirukkural Verse 303 — The Possession of Benevolence
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்.
English Meaning
Forget anger towards every one, as fountains of evil spring from it.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.
சாலமன் பாப்பையா
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.
கலைஞர்
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்