அறத்துப்பால் (Aram)Chapter 31: வெகுளாமை
திருக்குறள் 304
Thirukkural Verse 304 — The Possession of Benevolence
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற.
English Meaning
Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?
சாலமன் பாப்பையா
முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?
கலைஞர்
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்