அறத்துப்பால் (Aram)Chapter 31: வெகுளாமை
திருக்குறள் 305
Thirukkural Verse 305 — The Possession of Benevolence
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்.
English Meaning
If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.
சாலமன் பாப்பையா
தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.
கலைஞர்
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்