அறத்துப்பால் (Aram)Chapter 31: வெகுளாமை

    திருக்குறள் 307

    Thirukkural Verse 307 — The Possession of Benevolence

    Thiruvalluvar

    சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.


    English Meaning

    Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    (தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.

    சாலமன் பாப்பையா

    நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.

    கலைஞர்

    நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும் அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்