அறத்துப்பால் (Aram)Chapter 31: வெகுளாமை

    திருக்குறள் 308

    Thirukkural Verse 308 — The Possession of Benevolence

    Thiruvalluvar

    இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று.


    English Meaning

    Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.

    சாலமன் பாப்பையா

    பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.

    கலைஞர்

    தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது