அறத்துப்பால் (Aram)Chapter 31: வெகுளாமை

    திருக்குறள் 309

    Thirukkural Verse 309 — The Possession of Benevolence

    Thiruvalluvar

    உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்.


    English Meaning

    If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.

    சாலமன் பாப்பையா

    உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.

    கலைஞர்

    உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்