அறத்துப்பால் (Aram)Chapter 31: வெகுளாமை

    திருக்குறள் 310

    Thirukkural Verse 310 — The Possession of Benevolence

    Thiruvalluvar

    இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை.


    English Meaning

    Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.

    சாலமன் பாப்பையா

    பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.

    கலைஞர்

    எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார் சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்