அறத்துப்பால் (Aram)Chapter 32: இன்னா செய்யாமை
திருக்குறள் 315
Thirukkural Verse 315 — Not Injuring
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை.
English Meaning
What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep of pain from another as much as from himself ?
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.
சாலமன் பாப்பையா
அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?
கலைஞர்
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை