அறத்துப்பால் (Aram)Chapter 33: கொல்லாமை
திருக்குறள் 324
Thirukkural Verse 324 — Not Killing
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி.
English Meaning
Good path is that which considers how it may avoid killing any creature.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
சாலமன் பாப்பையா
நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.
கலைஞர்
எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்