அறத்துப்பால் (Aram)Chapter 34: நிலையாமை
திருக்குறள் 337
Thirukkural Verse 337 — Instability
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல.
English Meaning
Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.
சாலமன் பாப்பையா
உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உடம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர்.
கலைஞர்
ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்