அறத்துப்பால் (Aram)Chapter 34: நிலையாமை

    திருக்குறள் 338

    Thirukkural Verse 338 — Instability

    Thiruvalluvar

    குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு.


    English Meaning

    The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

    சாலமன் பாப்பையா

    உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.

    கலைஞர்

    உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்