அறத்துப்பால் (Aram)Chapter 34: நிலையாமை

    திருக்குறள் 339

    Thirukkural Verse 339 — Instability

    Thiruvalluvar

    உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.


    English Meaning

    Death is like sleep; birth is like awaking from it.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

    சாலமன் பாப்பையா

    உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.

    கலைஞர்

    நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு