அறத்துப்பால் (Aram)Chapter 34: நிலையாமை
திருக்குறள் 340
Thirukkural Verse 340 — Instability
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு.
English Meaning
It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.
சாலமன் பாப்பையா
உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!
கலைஞர்
உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது