அறத்துப்பால் (Aram)Chapter 35: துறவு

    திருக்குறள் 341

    Thirukkural Verse 341 — Renunciation

    Thiruvalluvar

    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.


    English Meaning

    Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.

    Share this result

    Generate a beautiful card to share on WhatsApp or social media. Your link gives friends a 14-day Full Pro trial.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

    சாலமன் பாப்பையா

    எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.

    கலைஞர்

    ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை